புதினங்களின் சங்கமம்

42 வயதான வவுனியா நபரை காதலித்து ஓடிய 15 வயது மட்டக்களப்பு சிறுமி!! பொலிசார் நடவடிக்கை !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபரையும் நேற்று (03.06.2022) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்குவருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு நேற்று அதிகாலை வந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர். அத்தோடு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.