புதினங்களின் சங்கமம்

ரணில் பிரதமராக வந்ததற்கு வெடி கொழுத்திய இளைஞனை நையப்புடைத்த தாய்!! யாழில் சம்பவம்!!

யாழ் அரியாலைப் பகுதியில் வீட்டில் வைத்திருந்த பணத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த 21 வயது இளைஞன் தாயாரால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். ரணில் பிரதமராகியதை அறிந்த சிலர் குறித்த இளைஞனை உசுப்பேற்றி அவனின் வீட்டில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை தாயாருக்கு தெரியாது எடுக்கச் செய்து அப் பணத்தில் வெடி கொழுத்தியுள்ளனர். இதனை அறிந்தே தாயார் சம்பவ இடத்துக்கு சென்று மகனை தாக்கியுள்ளார். இச் சம்பவத்தின் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகப் பரவுகின்றது.