புதினங்களின் சங்கமம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.