புதினங்களின் சங்கமம்

மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்த இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்குதல்! கணவன், மனைவி கைது

மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பை எடுத்த இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட பெண்ணும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.