புதினங்களின் சங்கமம்

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

யாழ்.கல்வியங்காடு – சட்டநாதர் கோவிலடியை அண்மித்த பகுதியில் புடைவை வியாபாரி ஒருவர் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

சட்டநாதர் கோவிலுக்கு சென்றுவிட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அண்மையில் யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.