புதினங்களின் சங்கமம்

பெற்றோருக்கு தெரிhது தொலைபேசிக் காதல்!! பிடிபட்ட 19 வயது மாணவி உயிர் மாய்த்தார்!!

கண்டி, கலஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் கழிவறையில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

கண்டியின் பிரபல மகளிர் கல்லூரியான பாலிகா வித்தியாலத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவியே இந்த விபரீத முடிவெடுத்தார். மாணவியின் காதலனிடமிருந்து கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியை குடும்பத்தினர் கண்டுபிடித்ததை தொடர்ந்தே, இந்த விபரீத முடிவையெடுத்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (15) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செல்வந்த வணிக குடும்பத்தை சேர்ந்த மாணவியின் தாயார் ஆசிரியையாவார். தந்தை கலஹா, அண்ணாசிவத்தை பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் ஆவார்.

மாணவி, தமது குடும்பத்தினருக்கு தெரியாமல் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி வந்துள்ளார். மாணவியின் காதலன் அனுப்பிய குறுஞ்செய்தியொன்றுடன் கையடக்க தொலைபேசி, மூத்த சகோதரனிடம் சிக்கியுள்ளது.

மாணவிக்கு காதலன் இருப்பதை அறிந்த பெற்றோர், கடுமையாக எச்சரித்துள்ளனர். அத்துடன், கையடக்க தொலைபேசியை பறித்து, அதை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவி குளியலறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிவிட்டு, ஒன்றரை லீற்றர் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீமூட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதான மாணவியொருவர் கடந்த 11ஆம்திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் முறையிட்டிருந்தனர். இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் நாவலப்பிட்டியை சேர்ந்த 20 வயதான இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

பேராதனை பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, மாணவி திடீரென மகாவலி ஆற்றில் குதித்ததாகவும், அச்சத்தால் அந்த இடத்தை விட்டு சென்று விட்டதாகவம் இளைஞன் தெரிவித்திருந்தார்.

கையடக்க தொலைபேசி மூலமே இருக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஒரே பாடசாலையை சேர்ந்த மாணவிகள் இருவர், கையடக்க தொலைபேசியின் வறான பயன்பாட்டினால் ஒரு வாரத்திற்குள் உயிரை மாய்த்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.