யாழில் பிரபல ஆலயத்தில் காட்சி கொடுத்த நாக பாம்பு! (Photos)
யாழில், பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். இக்காட்சியளிப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்திலேயே அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி கொடுத்துள்ளதாக இச்சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.