புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்றினால் இளம் தம்பதி பலி: 5 வயது பிள்ளை நிர்க்கதி!

கிரிபத்கொட பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.

கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த
தனஞ்சய அனுருத்த (36) மற்றும் 27 வயதான அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மனைவி நேற்று (25)
காலை இறந்தார்.

அவர்களின் ஐந்து வயது மகள் இப்போது நிர்க்கதியாகியுள்ளார்.