புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இரண்டு வயது தமிழ் சிறுவன் கனடா ஸ்காபுறோவில் விபத்தில் மரணம்!!

கனடாவில்   உள்ள  ஸ்காபுறோவில் மக்நிக்கல்  அண்ட்  மார்க்கம்  சந்திப்பில்   அமைந்துள்ள  அங்காடியில்  31-07-2021 மாலை  5 மணியளவில்  நடைபெற்ற  விபத்தில் இரண்டு  வயது  தமிழ்  சிறுவன் ஸ்தலத்திலேயே  மரணமானார்  என்பதை  பெரும்  கவலையுடன்  அறியத் தருகிறோம் . மார்க்கம்  வீதியால் அங்காடிக்குள் வந்த  வாகனத்தோடு ,  அங்காடியினுள்  இருந்து ஓடி  வந்த  சிறுவன்  மோதுண்டதால்    ஸ்தலத்திலேயே  சிறுவன்  உயிர் இழந்ததாகவும்  நேரில்  பார்த்த  ஓர்  சீன  இனத்தை  சேர்ந்தவர் தெரிவpத்தததாக  அறியப்படுகிறது .இதே  வேளை  சம்பவத்தை கைதொலைபேசி  மூலம்  படமாக்கி  சமூகவலைத் தளத்தில்  பதிவேற்ற முனைந்த  ஒரு  பெண்  பொலிசாரால்  எச்சரிக்கை செய்யப்பட்டதோடு , பதிவேற்றியதை அழிக்குப்படியும் பணிக்கப்பட்டார்  எனவும்  அறியப்படுகிறது .வாகனத்தை ஓட்டியவர்  அடிபட்ட  சிறுவனை  பொலிஸார் , அம்புலன்ஸ்  வரும் வரை தூக்கி  வைத்திருந்ததாக  சம்பவத்தை  நேரில்  பார்த்தவர்கள்  கூறியுள்ளனர் . பொலிஸார்  நான்கு  மணி நேரத்துக்கு  மேல்  விசாரணைகளை  வாகன  தரிப்பிடத்தில்  மேற் கொண்டிருந்தனர் . பொது  மக்கள்  , வர்த்தக

பெருமக்கள்  பூ  மலர்  தூவி  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .