புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மல்லாவியில் திருமணமாகி சில நாட்களேயான இளம் தம்பதிகள் கிணற்றில் சடலமாக மிதக்கின்றனர்!! (Photos)

மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27) ஆகியோரே
உயிரிழந்தவர்களாவார் .

நேற்று மாலை 7 மணியளவில் இருவரும் கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள்
தாமே கிணற்றிற்குள் பாய்ந்தார்களா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களா என்பது இதுவரை
உறுதியாகவில்லை.

குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது
திருமணம் செய்துள்ளனர்.

குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.