புதினங்களின் சங்கமம்

மன்னார் வீதியில் விபத்து!! யாழ் அரச ஊழியரான இளைஞன் பலி!! (Photos)

மன்னார் வீதி, முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த வடமராட்சியை சேர்ந்த அரச உத்தியோகத்தரும், சமூக செயற்பாட்டாளருமான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணபதி அறக்கட்டளை அமைப்பின் மன்னார் மாவட்ட பொறுப்பாளரும், சமூக சேவையாளராக செயற்பட்டு வந்த அரச உத்தியோகத்கதரான இளைஞரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – வியாபாரிமூலையைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது மன்னார் முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.