புதினங்களின் சங்கமம்

அரச வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை ஆரம்பித்தன!

அரச வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை ஆரம்பித்தன. இன்றைய தினம் இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் 11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் அனைத்து வங்கி சேவைகளையும் முன்னெடுத்தன.

இதேவேளை திங்கள் முதல் பகல் 1 மணி வரை சேவைகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தபாலகம் உள்ளிட்ட சில அரச திணைக்களங்களும் மாத இறுதி பணிகளில் ஈடுபடுவதற்காக இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் இன்று மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக இன்று முற்பகல் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.