புதினங்களின் சங்கமம்

கொரோனா கொடூரம்!! பருத்தித்துறை நகர் முற்றாக முடங்கியது!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவியதாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் சமூக முடக்கல் நிலையை அடுத்து பருத்தித்துறை நகரம் முற்றாக முடங்கியுள்ளது.

யாழ். வடமராட்சி பருத்தித்துறை நகரம் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சமூக முடக்கல் உத்தரவை மீறி நடமாடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறாது உள்ளதை அவதானிக்க முடிவதாகவும்,

பொலிசார் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் முக்கிய சந்திப்பு பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.