யாழ் நாவற்குழி பாலத்திலும் கைதடிப் பலத்துக்கு அருகிலும் ஏற்பட்ட 2 விபத்துக்கள்!! (வீடியோ)
யாழ் நாவற்குழிப் பாலத்தில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் பிக்கப் வாகனம் ஒன்று கடும் சேதத்துக்குள்ளாகியது. இந்த வாகனத்தில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளதாகவும், மழை பெய்து கொண்டிருந்த போது அதி வேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் என தெரியவருகின்றது.
இதே போல் கைதடிப் பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் இ.போ.ச பேரூந்து அதி வேகத்தில் வந்து நிலை தடுமாறி பாதையை விட்டு விலகி தனியார் காணிக்குள் புகுந்து கொண்டது. பஸ் நிலைதடுமாறி வருவதை எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் சாரதி மற்றும் வாகனச் சாரதிகள் தமது வாகனங்களை நிறுத்திக் கொண்டதால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.





