புதினங்களின் சங்கமம்

வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் படுகாயம்!! (Photos)

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் புகையரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று (22.04.2021) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார்.
இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத 40வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்தவராவார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிர நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of sitting, motorcycle, outdoors and treeMay be an image of motorcycle and outdoorsMay be an image of one or more people and outdoorsMay be an image of one or more people, people standing and outdoorsMay be an image of train and railway