காதலனுடன் மகள் ஓட்டம்- யாழ்.வாள்வெட்டு குழு வவுனியாவில் அட்டகாசம்!!
யாழில் இருந்து வாள்கள் சகிதம் சென்ற குழு வவுனியாவில் இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதி இளைஞன் யாழ்.பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி பெண்ணை அழைத்து சென்று பதிவு திருமணமும் செய்துள்ளார்.
இதனையடுத்து யாழில் இருந்து இரு வான்களில் வாள்;கள் சகிதம் 10 மேற்பட்ட இளைஞர் குழுவுடன் வவுனியாவுக்கு சென்ற தந்தை குறித்த இளைஞன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளரின் வீடு, இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீ என்பவற்றுககுள் புகுந்து அச்சுறுத்தியதுடன் வீட்டு உடமைகளையும் அடித்து நொருக்கியுள்ளது.
இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டோர் பொலிஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.