கிளிநொச்சி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கர்ப்பம்!! மரணம் கொலை! (Video)
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் முடிவுகள் தெரிவித்துள்ளன.
அப்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.