புதினங்களின் சங்கமம்

‘ஹலோ உங்களுக்கு கொரோனா தொற்று உறுதி’; இலங்கை பெண்ணுடனிருந்த காதலனின் நிலை!

நாவல பகுதியில் வசிக்கும் இளம் பெண் கடந்த 25 ஆம் திகதி பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பி.சி.ஆர் அறிக்கையின்படி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அந்த நேரத்தில் சுகாதார அதிகாரிகள் சிறுமியை தொலைபேசியில் அழைத்து அவருக்கு தொற்று உள்ளமையை தெரிவித்தனர்.

அவரை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அவர் இருக்கும் இடம் குறித்து சுகாதார அதிகாரிகள் அவரிடம் தகவல் கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் கெக்கிராவாவில் உள்ள ஒரு லொட்ஜில் அவர் தனது காதலனுடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமி உடனடியாகவே லொட்ஜில் இருந்து சிறப்பு அம்புலன்சில் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.