லண்டனில் காதலன்!!வெள்ளவத்தையில் யாழ் பல்கலைக்கழக மாணவி கர்ப்பம்!! நண்பன் காரணமா?
தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் தனது கர்ப்பத்தைக் கலைக்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவியின் காதலன் லண்டனில் உயர்கல்வி கற்றுவருவதாகவும் தெரியவருகின்றது. வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது பாட்டி சுகவீனமுற்றிருந்ததால் அவரைக் கவனிப்பதற்காக குறித்த மாணவி கடந்த செப்டம்பர் மாதம் அங்கு சென்று தங்கியிருந்துள்ளார். இந் நிலையிலேயே குறித்த மாணவி நேற்று முன்தினம் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இரத்தம் வெளியேறிய நிலையில் குளியலறைக்குள் மயங்கி கிடந்ததாகத் தெரியவருகின்றது. யுவதியின் அனுமதியுடன் அடுக்குமாடிக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு அன்று காலை நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் வந்து சென்றதாகவும் அதன் பின்னரே யுவதி மயக்கமடைந்துகிடந்ததாகவும் குடியிருப்பில் வசிக்கும் ஏனையவர்கள் தெரிவித்துள்ளார்கள். பாட்டி குக்குரல் இட்டு கத்தியபோதே அவர்கள் யுவதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். யுவதிக்கு கருக்கலைப்பு நடந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களால் குடியிருப்பாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில் உள்ள வீடு வெளிநாட்டில் உள்ள யுவதியின் சித்திக்கு சொந்தமானது எனவும் தெரியவருகின்றது. யுவதியின் பாட்டியும் யுவதியும் மட்டுமே அங்கு தங்கியிருந்ததாகவும் யுவதியிடம் பல்கலைக்கழக நண்பர்கள் என கூறி பலர் வந்து சென்றதாகவும் அயல் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பில் கடமையாற்றும் காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.
யுவதியின் நண்பன் என கூறிக்கொள்ளும் ஒருவர் அடிக்கடி அங்கு வந்து சென்றதாகவும் தெரியவருகின்றது.அவரது அடையாள அட்டை இலக்கம் மற்றும் விபரங்கள் காவலாளியால் பதியப்பட்டே உள்ளே அவர் சென்று வந்துள்ளார். கொக்குவில் முகவரியுடைய 97ம் ஆண்டு இலக்கத்தைக் கொண்ட அடையாள அட்டையுடனே குறித்த நண்பன் அக்குடியிருப்புப் பகுதிக்கு வந்து சென்றுள்ளார்.

