முஸ்லீம் மதம் மாறிய தமிழர்கள் கைதாகின்றனர்!! நேற்று ஒருவர் கைது!!
முஸ்லிம் பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றிய தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள்
சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்துக்கு வருகைத் தந்த குறித்த நபர், மொஹமட்
ஹக்கீம் என்ற பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றி வந்துள்ளதுடன், நாளொன்றுக்கு 5 தடவைகள் மத போதனைகளையும் நடத்தியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.