புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித உடல்பாகங்கள்!! பொலிசார் குவிப்பு!

முள்ளியவளை பகுதியில் மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் உள்ள பாழடைந்த மண்கிணறு ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் கிணற்றில் உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் கிணற்றில் உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்டதோடு அந்த இடத்தில் பொலிஸ் சீருடையில் பொலிஸார் இல்லாத நிலையில் சிவிலுடையில் பொலிசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிவில் உடையில் நிறுத்தப்பட்டவர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர்.