கொரோனாவுக்கு மருந்தாம்!! கேகாலையில் ஆயுள்வேதவைத்தியர் வீட்டில் அலை மோதும் மக்கள்!! (video)
கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா
பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர்.
கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.
மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர், பவித்திரா வன்னியாராச்சி
அருந்தி பரிசோதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



