காதல் தோல்வி!! மன்னாரில் 20 வயது யுவதி தீயில் எரிந்து தற்கொலை!!
தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பத்திநாதன் மரிய பிரிசில்லா [பூஜா ] என்ற 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

