கொழும்பு தற்கொலைத் தாக்குதலில் இநந்தவர்களில் 5 வயதுக்குட்பட்ட 45 குழந்தைகள்!!
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 45க்கும் மேற்பட்டவர்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரியவருகின்றது.