புதினங்களின் சங்கமம்

யாழ் வைத்தியசாலையில் அநாதரவாக அம்மா விட்டுவிட்டு திரியும் கொடிகாமம் கடைக்காரன்!! (Video)

சங்கானை வைத்திய சாலையில் கடந்த இரு வாரங்களாக யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து நான்கு ஆண்பிள்ளைகளின் தாயாரான திருமதி சூசைதாஸ் லீலாவதி செல்வதற்கு இடமின்றி பராமரிப்பிற்காக வைத்திய சாலையில் தங்கியுள்ளார்.பல சிரமங்களின் மத்தியில் விடுதி தாதியர்கள் தமது சொந்த செலவில் பம்பஸ்,ஏற்ற உணவுகளை வழங்கிவருகின்றனர்.இத்தாயின் மகனான சூசைதாஸ் அருள்தேவராசா அல்லது அருள் தேவதாஸ் காளி கோயிலடி பருத்தித்துறை வீதி கொடிகாமத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பதாக அத்தாயின் மூலம் அறிய முடிகிறது.இத் தாயை பிள்ளைகளிடம் சேர்ப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

Chankanai Town Development Board

தாயை அநாதரவாக விட்டுவிட்டு கொடிகாமத்தில் கடை நடாத்தும் அந்தப் பிள்ளைக்கு இந்த அவலம் எட்டும்வரை பகிருங்கள்…