புதினங்களின் சங்கமம்

இலங்கையில் ஒரு மணி நேரத்துக்கு 09 பேர் உயிரழக்கும் அவலம்!

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமையில் மணித்தியாலத்திற்கு 09 பேர் உயிரிழந்து வருவதாக விசேட வைத்தியர் பத்மா குணர்த்ன தெரவித்துள்ளார்.

உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா மரணங்களில் அதிகளவானவை 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.