யாழ் வடமராட்சியில் பூச்சாடிக்குள் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது!!
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா
செடிகள் வளர்க்கப்படுகிறத என பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கிணங்க
நேற்று (17) குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்பொழுது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15க்கும் மேற்பட்ட
கஞ்சா செடிகளை மறைத்து வைத்து வளர்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

