புதினங்களின் சங்கமம்

இராணுவச் சிப்பாய் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு உயிர் மாய்ப்பு; இயக்கச்சியில் சம்பவம்

இயக்கச்சி படை முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்  இந்த சம்பவம் 17/10/2020 சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக   தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இராணுவ வீரர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் இராணுவ வீரருடன் தொடர்பை துண்டித்ததனால் குறித்த வீபரீதம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.