கம்பஹாவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்!
கொழும்பு டி சொய்சா பெ ண்கள் வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த ஐந்தும் பெண் குழந்தைகளாகும்.
இன்று காலை இந்தப் பிரசவம் நிகழ்ந்ததாக மருத்துவமனைப் பணிப்பாளா் டாக்டர் சகாரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம் பெபிலியாவல பகுதியில் வசிக்கும் 29 வயதான பெண்ணே 5 பெண் குழந்தைகளைப் பெற்றவராவார்.
குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனைப் பணிப்பாளா் டாக்டர் சகாரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார்.