ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (22.04.2019)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: உங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச் னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்: எந்தப் பிரச்னை களையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.

கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத் தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனநிம் மதி கிட்டும் நாள்.