புதினங்களின் சங்கமம்

பெண் பொலிஸுக்கு கொரோனா! பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தல்!!

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி பொலிஸ் ஏஸ்பி அலுவலகத்தை சேர்ந்த 30 பேரும், ஹோமாகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பேரும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.