புதினங்களின் சங்கமம்

இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழ் காரைதீவில் இருவர் கைது!

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ். காலைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாடு கோடியக்கரை பகுதியில் இருந்து படகில் கேரள கஞ்சாவினை கடத்திவந்த போது யாழ் காரைதீவு கடற்பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கடத்திவரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை கடத்தி வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஆறு மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.