யாழில் மதக்கலவரம் உண்டாக சதியா?? வெளிநாட்டு பயணியால் மாதசிலை உடைக்கப்பட்டது!!
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் மாதா சொரூபம்
வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைப் சேதப்படுத்தியதாகக்
கூறப்படும் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் அப்பகுதி மக்களால்
பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

