புதினங்களின் சங்கமம்

கடமை முடிந்து வீடு சென்ற நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வழிமறித்து வாள்வெட்டு!

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும், சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த தே. நடேசு (வயது- 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.