புதினங்களின் சங்கமம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கைது!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் அவர் சிஜடி முன்னிலையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பின் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

இதன் மேலதிக நடவடிக்கைகளை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.