புதினங்களின் சங்கமம்

யாழில் பிறேமராசன் அடித்துக் கொலை!! வாய்பேச முடியாத ஒருவர் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.அத்தோடு, இந்த கொலையுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பேச்சுத் திறனற்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதானவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளதன் பின்னர், அதே பகுதியை சேர்ந்த பேச்சுத் திறனற்ற 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை நடந்த இடத்தினை யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x