ஒரு லட்சம் முட்டைகளுடன் கன்டர் வாகனம் சிலாபம் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கிய காட்சிகள் இதோ!! (Photos)
ஒரு இலட்சம் முட்டைகளுடன் சென்ற லொறி சிலாபம் லுனு ஓயா பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி நீர் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது லொறி நீரில் புதைந்த நிலையில் பின்னர் இராணுவத்தினரின் பாரம் தூக்கி வாகனம் அழைக்கப்பட்டு மூழ்கிய லொறி மீட்கப்பட்டது.
லொறி சாரதி மற்றும் அதில் பயணித்த ஏனைய உதவியாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று 29 ஆம் திகதி மாலை விபத்துக்குள்ளானதுடன் இன்று (30) லொறி மீட்கப்பட்டது.







