யாழ் அத்தியடிப் பிள்ளையார் கோவில் சதுர்த்தி பூசையில் ஈடுபட்டவர்களுக்கு பொலிசார் புகுந்து விசேட பூசை!!
யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் (26) சதுர்த்தி விரத பூசை வழிபாடு இன்று மாலை இடம்பெற்றது.
பூசையில் கலந்து கொண்ட 17 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

