யாழில் கஞ்சா கடத்தல்காரர்களை துரத்திச் சுட்ட அதிரடிப்படையால் பதற்றம்!!
யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்வதற்காகவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
யாழிலிருந்த வந்த விசேட பொலிஸ் அணியினரே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சற்று முன்னர் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு தொகை கஞ்சாப் பொதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.