முல்லையில் ஊரடங்கு நேரம் பாதிரியார் குழு வீடு புகுந்து அட்டகாசம்!! சுவாமி படங்கள் அடித்து உடைப்பு!! (Photos)
ஊரடங்கு வேளையில் பாதிரியார் குழு வீடு புகுந்து அட்டகாசம்
இந்து சுவாமி படங்கள் அடித்து உடைத்து பாம்பு புற்றுக்குள் வீசல்
விசுவமடுவில் சம்பவம்
சுவிஸ் போதகரைப் பாதுகாக்க சுமந்திரன் செய்த சதி!! அதிர்ச்சித் தகவலகள் இதோ!!
விசுவமடு மேற்கில் ஏழைக் குடும்பமொன்றின் வீட்டிற்குள் புகழ்ந்த பாதிரியார் குழு வீட்டில் இருந்த சுவாமி படங்களை அடித்து உடைத்து பாம்பு புற்றுக்குள் வீசியுள்ளனர்
இந்த சம்பவம் 27/3/2020 வெள்ளிக்கிழமை விசுவமடு மேற்கில் இடம்பெற்றுள்ளது.
விசுவமடு மேற்கில் வாசிக்கும் குடும்பமொன்றின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அந்த குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் மாற்றியுள்ளனர்
அங்குள்ள இந்து இளைஞர்கள் அதனை தடுத்து நிறுத்தியதோடு அந்த குடும்பத்திற்கு வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்
இந்து மதத்திற்கு சென்ற அந்த குடும்பத்தின் வீட்டிற்குள் கேப்பாப்புலவு பகுதியில் இருந்து சென்ற பாதிரியார் குழுவொன்று வீடு புகுந்து அங்கிருந்த சுவாமி படங்களை அடித்து உடைத்து அருகில் உள்ள பாம்பு புற்றுக்குள் வீசி கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தி உள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிவுக் கிராம அலுவலருக்கு தெரிவித்த போது அந்த இடத்துக்குச் சென்று கிராம அலுவலர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அறிவித்துள்ளார்
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தொடர்பு கொண்டபோது குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் அது சம்பந்தமாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.