கொரோனாவுடன் இத்தாலியிலிருந்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி ராஜ்மிதுன் உட்பட்ட 12 பேரைத் தேடுகின்றது பொலிஸ்!!
இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்குள் நுழைந்து தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படாமலிருக்கும் 12 பேருடைய பெயர் மற்றும் புகைப்படங்களை அரசு வெளியிட்டிருக்கின்றது.
ஊரடங்கு நேரத்தில் நிறை வெறியில் நின்ற கோத்தாவின் கட்சி அமைப்பாளர் யாழ்ப்பாணத்தில் கைது!!
இவர்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிட்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த ராஜ்மிதுன் தவராஜா எனவும் அவருக்கு 28 வயது எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த நபர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் 119 அல்லது 0718591864, 0112444480, 0112444481 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு
பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.


