குழந்தை ஒன்று உட்பட இலங்கையில் 59 பேருக்கு கொரோனா!!
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

