புதினங்களின் சங்கமம்

காரைதீவுப்பிரதேசத்தில் தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!!

கொரோனா அச்சம் காரணமாக காரைதீவுப்பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரை மீறிச் பிரத்தியோக வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று காலை குறித்தவகுப்பு நடாத்தப்பட்டதையறிந்து பொதுமக்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.