புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவிலில் ஆட்டோக்களை காவாலிகள் அதிவேகத்தில் செலுத்தி விபத்துக்குள்ளான காட்சிகள்!!(Photos)

யாழ் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயமைடைந்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வீதியூடாக தாவடி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி கொக்குவில் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் இரு முச்சக்கர வண்டியில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற முச்சக்கர வண்டியை ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிவேகமாக ஆட்டோக்களை செலுத்தியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No photo description available.Image may contain: outdoorImage may contain: car