வடக்கில் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் கைது!!
இன்று சனிக்கிழமை காலை அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் போலீசார் நாலு சந்தேகநபர்களை வாள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் கைது செய்து உள்ளார்கள். நான்கு பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது மன்னார், மட்டுவில். அச்செழு. ஆவரங்கால் பிரதேசங்களில் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என ஒப்புக் கொண்டுள்ளார்கள் தற்பொழுது தீவிர விசாரணை. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…
இவர்கள் கொள்ளையிடும் வீடுகளில் இருக்கும் இளம் பெண்கள், சிறுமிகள், இளம் குடும்பப் பெண்களுடன் பாலியல் துன்புறுத்தல்களிலும் ஈடுபடுகின்றவர்கள் எனவும் பெண் உறுப்பில் மிளகாய்துாள் போட்ட சம்பவங்களும் வடபகுதி கொள்ளைகளில் நடந்துள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெறவேண்டும் எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
5 லட்சம் ரூபாக்களுக்கு அதிகமான விலையுள்ள மோட்டார் சைக்கிள்களில் காவாலிகள் வலம்வருவதும் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களில் பெறப்பட்ட பணத்திலேயே என்பது வெளிச்சமாகியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.







