பாலியல் லீலைகள்!! யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி!! (Photos)
யாழ் கோவில் வீதியில் சென்பொஸ்கோ சந்திக்கு அருகில் ‘இராசம்மா‘ திருமண மண்டபம் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த விடுதி ஒன்று இன்று யாழ் பிரதேசசெயலக அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த மண்டபச் சூழலில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சோடிகளாக வந்து போவதாகவும், அப்பகுதிக்கு பழக்கமில்லா இளம் ஜோடிகள் அங்கு சென்று திரும்புவதாகவும் கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்தே அந்த மண்டபத்திற்குள் அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து தேடுதல் நடாத்தியுள்ளனர். குறித்த மண்டப அறைக்குள் இருந்து ஒரு ஜோடி ஒன்டரை வயதுக் குழந்தையுடன் பிடிபட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு தாயான இளம் பெண்ணும் இன்னொரு ஆணும் பிடிபட்ட போதும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்றும் பிடிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 17 வயது எனவும் 5 மாதக் குழந்தையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் விரைவி்ல்

