புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு வவுனதீவில் பொலிஸ் அதிகாரி அடித்துக் கொலை!!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுணதீவில் உள்ள மூன்றாம் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸார் அடித்துக்கொலைசெய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.