புதினங்களின் சங்கமம்

யாழ் இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!! எதற்காக?

யாழ்ப்பாணத்தை இருந்து இந்தோனேசியா சென்று இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் இவ்வருடம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்று உயிரிழந்த அங்கிருந்து தகவல் கிடைத்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத போதும், இளைஞரின் மரணம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.