புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு கடலில் மிதந்துவந்த வெளிநாட்டவரின் சடலம்!

மட்டக்களப்பு – பாலமுனை கடலிலின் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நபரின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.