புதினங்களின் சங்கமம்

சுமந்திரனுக்கும் முக்கிய அரச பிரமுகருக்குமிடையில் இரகசிய பேச்சுவார்த்தை?? தோல்வியில் முடிந்தால் சுமந்திரன் கைது??

சுமந்திரனுக்கும் அரசதரப்பு அதி முக்கியஸ்தர் ஒருவருக்குமிடையில் இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த பேச்சுவார்த்தை எதற்காக நடைபெறுகின்றது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் சுமந்திரன் கைதாகலாம் என சுமந்திரனுக்கு நெருக்கமானவர்களால் தெரியவருகின்றது. சுமந்திரனின் குறித்த ஒரு செயற்பாட்டில் குற்றம் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுமந்திரனைக் கொல்லச் சதி செய்ததாக கூறி முன்னாள் புலி உறுப்பினர்கள் 5 பேரை சிறையில் அடைத்து மேலதிக பாதுகாப்பு பெற்றிருந்தார் சுமந்திரன். அந்த பாதுகாப்புச் செலவுகளுக்காக சுமந்திரனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி குற்றச்சாட்டை அப்பாவி முன்னாள் புலிப்போராளிகள் மீது சுமத்தியே சுமந்திரன் இந்தப்பாதுகாப்பை பெற்று பல கோடிரூபா அரச நிதியை விரையம் செய்தார் என தெரிவித்து சுமந்திரன் கைது செய்யப்படலாம்.

தற்போதய அரசாங்கத்தை கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதுடன் போர்க்குற்றம் உட்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான வெளிநாடுகளின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறே குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.